காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை, நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 196 சர்வே எண்களில் இருக்கும் வீட்டுமனைகளை கையகப்படுத்தப்பட உள்ளது. 5,746 ஏக்கரில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு பல கட்டங்களாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
The post பரந்தூர் ஏர்போர்ட் : கையகப்படுத்தப்படும் மேலும் 8.5 ஏக்கர் நிலம் appeared first on Dinakaran.