பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

6 months ago 18

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பலமாக கொட்டியது. மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் 2-வது நாளான இன்று இந்த பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. இதற்கான டாஸ் சுண்டபட்டது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பிரதமர் லெவன் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Read Entire Article