‘பயிர்க் கடன் பெற சிபில் ஸ்கோர்’ உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

1 week ago 4

திருப்பூர்: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து இன்று (ஜூன் 9) அளித்த மனுவின் விவரம்: கடந்த மே 26-ம் தேதி தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர், விவசாயி கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு, விவசாயிகளின் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் எனஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read Entire Article