பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிக்கு வேளாண் மாணவர்களை பயன்படுத்தக்கூடாது: ஓபிஎஸ், டிடிவி வலியுறுத்தல்

2 months ago 11

சென்னை: முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்: பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை வருவாய்த் துறை மேற்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற நிலையில், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரை வைத்து பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீட்டுப் பணியை மேற்கொள்ளும் அரசின் செயல் கண்டனத்திற்குரியது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: டிஜிட்டல் சர்வே பணிகளுக்கு தேவையான பெரும்பாலான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் சூழலில், தமிழக அரசு அதிகாரிகளை தவிர்த்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை கட்டாயப்படுத்தி சர்வே பணிகளில் ஈடுபட வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

The post பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிக்கு வேளாண் மாணவர்களை பயன்படுத்தக்கூடாது: ஓபிஎஸ், டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article