பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

6 months ago 20

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் நாளை வரை பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். ஆனால் தொடர் மழை, விடுமுறை, விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாத சூழல் உள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் இன்னும் பயிர் காப்பீடு செய்யவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article