பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை தீவைத்து எரித்த மாவோயிஸ்டுகள்: ஆந்திராவில் பரபரப்பு

2 months ago 10

திருமலை: ஆந்திர மாநிலம் அல்லூரி சீத்தாராமராஜு மாவட்டம் சிந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பத்ராச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை மாவோயிஸ்டுகள் வழிமறித்து நிறுத்தி, அதிலிருந்த பயணிகளை இறக்கிவிட்டனர். பின்னர் காரை தீ வைத்து எரித்தனர்.

ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் போலீசார் என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் பலர் உயிரிழந்து, அவர்களது இயக்கம் பின்னடைவைச் சந்தித்ததால், ஆந்திராவில் ஆதிக்கம் செலுத்த முயல்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் காரில் வந்தவர்கள் விவரங்களையும் போலீசார் ரகசியமாக வைத்து விசாரணை நடத்துகின்றனர். ஆந்திராவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை வலுவடைய செய்யாமல் அவர்களை திருப்பி அனுப்பும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை தீவைத்து எரித்த மாவோயிஸ்டுகள்: ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article