
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் லீட்சில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அளித்த பேட்டியில் ,
'ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி திறமையானவர். பந்து வீச்சில் அவரால் மாயாஜாலத்தை காட்ட முடியும். அவருடன் கலந்துரையாடியதில் இருந்து, அவரை கொஞ்சம் அதிகமாக பந்து வீச வைப்பது எனக்கே சவாலாக தெரிந்தது. அவர் நிறைய ஓவர்கள் பந்து வீசுவதை பார்க்க விரும்புகிறேன். பேட்டிங்கில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே சமயம் ஒரு அணியாக குறிப்பாக இங்குள்ள (இங்கிலாந்தில்) சீதோஷ்ண நிலையில் அவரது பந்து வீச்சை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்' என்றார்.