அரசு மருத்துவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு பணி மூப்பு அடிப்படையில் நடத்தப்படுகிறது. குறிப்பாக, முதுநிலை படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியிடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.