கிளாம்பாக்கம்: பணி நிரந்தரம் செய்யக் கோரி, தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு கடந்தாண்டு தற்காலிக ஊழியர்களாக 300-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அடிப்படை கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுதவிர ஒரு நாள் ஊதியமாக ரூ.750 வழங்கப்பட்டு, 250 பணி நாட்கள் முடித்தபின்னர் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர்கள் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.