நெல்லை, ஜூன் 7: பணகுடியில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருப்பணி புத்தன்தருவையைச் சேர்ந்தவர் ஞானசிங் (52). இவரை கடந்த 2012ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் பணகுடி போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் ஞானசிங் ஆஜராகாமல் கடந்த 2 மாதம் தலைமறைவாக இருந்தார். இதனையறிந்த நீதிமன்றம் ஞானசிங்கை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பணகுடி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஞானசிங்கை கைது செய்து வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
The post பணகுடியில் நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது appeared first on Dinakaran.