
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் மஜிதா சாலையில் ஆட்நடமாட்டமற்ற பகுதியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்தது பாபர் ஹல்சா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது. பயங்கரவாதியின் பெயர் உள்ளிட்ட விவரம் இதுவரை வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும், அதை பயங்கரவாதி எடுத்து வர முயன்றபோது குண்டு வெடித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.