பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்பு? - ராணுவம் மறுப்பு

5 hours ago 4

சண்டிகர்,

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் காஷ்மீர், குஜராத், பஞ்சாப் போன்ற எல்லை மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்கள் இந்தியாவின் எஸ்-400, ஆகாஷ் போன்ற வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் முறியடிக்கப்பட்டன.

அதேவேளை, இந்த மோதலின்போது பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலை குறிவைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை முறியடிக்க பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பு அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்ததாக இந்திய ராணுவத்தின் வான்பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெனரல் சுமிர் இவன் டி கனா கூறினார். இவரது கருத்துக்கு பொற்கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்பு, வான் பாதுகாப்பு துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதமும் அமைக்கப்படவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொற்கோவிலில் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் அமைக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், பொற்கோவில் வளாகத்தில் எந்த பகுதியிலும் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள், வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட எந்தவித ஆயுதங்களும் அமைக்கப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article