பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றி...பெங்களூரு கேப்டன் கூறியது என்ன ?

4 weeks ago 8

முல்லான்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரம்சிம்ரன் சிங் 33 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில், வெற்றிக்கு பின்னர் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது ,

பந்து வீச்சாளர்களை பாராட்ட வேண்டும். படிக்கல் மற்றும் கோலி திட்டங்களை செயல்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது . பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு கட்டங்களில் சிறப்பாக செயல்பட்டனர், அவர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம் அழகாக இருந்தது.

எங்கள் பீல்டிங் பற்றி நேற்று பேசினோம். அனைவரும் முயற்சிகளை மேற்கொண்டனர்,எங்கள் சொந்த மைதானத்தில் நல்ல கிரிக்கெட் விளையாட முயற்சிப்போம், அங்கு எங்கள் தவறுகளை சரிசெய்ய முயற்சிப்போம்.என தெரிவித்தார்.

Read Entire Article