
புதுடெல்லி,
தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;
"பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்."என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.