பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை தர ராமதாஸ் வலியுறுத்தல்

5 months ago 12

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிலைப்புக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நிலையில், பொங்கல் திருநாளையொட்டி தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு ஆய்வு செய்ய மறுக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. பகுதி நேர ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். எனவே, பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும். அத்துடன் அவர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களின் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

The post பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை தர ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article