
காத்மண்டு,
நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.2 ரிக்டர் ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்க, மதியம் 2.19 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை என்பது குறிப்பிடத்தகக்து.