நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் ஏன்? - பரபரப்பான பின்னணி தகவல்

3 months ago 11

திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் திடீரென்று மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளராக பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ அப்துல் வகாபை கட்சி தலைமை நியமித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை கட்சி ரீதியாக கிழக்கு மாவட்டம், மத்திய மாவட்டம், மாநகர் மாவட்டம் என்று 3 ஆக பிரித்து நிர்வாகிகளை திமுக நியமித்திருக்கிறது. அதன்படி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலராக ஆவுடை யப்பனும், மத்திய மாவட்ட பொறுப்பாளராக டிபிஎம் மைதீன்கானும், மாநகர் மாவட்ட செயலராக சுப்பிரமணியனும் செயல்பட்டு வந்தனர்.

Read Entire Article