
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12,500 ஏக்கர்), கோடகன் கால்வாய் (கண்டியப்பேரிகுளம் வரை 5,048 ஏக்கர்) பாளையங்கால்வாய் (தாமரைக்குளம் வரை 5,974 ஏக்கர்), நெல்லை கால்வாய் (வண்ணாண்பச்சேரிகுளம் வரை 4,168 ஏக்கர்) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள மருதூர் மேலக்கால் வாய்க்கால் (4,554 ஏக்கர்), மருதூர் கீழக்கால் வாய்க்கால் (2,970 ஏக்கர்), தென்கால் வாய்க்கால் (2,693 ஏக்கர்) மற்றும் வடகால் வாய்க்கால் (3,289 ஏக்கர்) ஆகிய 11 கால்வாய்களின் கீழுள்ள 46 ஆயிரத்து 786 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இதன் மூலம் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள 46 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.