நெல்லை நீட் பயிற்சி மைய விவகாரம்: மாணவர்கள் புகார் அளிக்கவில்லை என ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு

4 months ago 15

திருநெல்வேலி: திருநெல்வேலி நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பமாக, மாணவர்கள் தரப்பிலிருந்து புகார்கள் ஏதும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனிடம் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.

திருநெல்வேலியிலுள்ள ஜால் நீட் தேர்வு மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்ததாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அம்மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். ஜலாலுதீன் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை மேற்கொண்டார். பயிற்சி மையத்தில் சமூகநலத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அங்கு செயல்படும் மாணவியர் விடுதிக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்தது.

Read Entire Article