நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு தமிழக விவசாயிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 months ago 8

 

திருவாரூர், டிச. 11: கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட கோரி தமிழக விவசாயிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், இதேபோல் கனமழையால் சேதமடைந்த வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்,

கடந்த ஆண்டு நெல் மற்றும் பருத்தி பயிருக்கு வழங்கப்பட வேண்டியபயிர் காப்பீடு இழப்பீடு தொகையினை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நல சங்கத்தினர் திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராமமூர்த்திமற்றும் பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி, வைத்தியநாதன், முருகேசன், செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு தமிழக விவசாயிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article