நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு: பின்னலாடை நிறுவனங்கள் அதிர்ச்சி

1 day ago 3

திருப்பூர்: திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளன.

இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கிலோவுக்கு 10ம் நம்பர் கோம்டு நூல் ரூ.178, 16ம் நம்பர் ரூ.188, 20ம் நம்பர் கோம்டு நூல் ரூ.246, 40ம் நம்பர் ரூ.296க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பின்னலாடை நிறுவனங்கள் அதிர்ச்சி யடைந்து உள்ளன.

The post நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு: பின்னலாடை நிறுவனங்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article