நீர்வரத்து சீரானதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

7 months ago 21

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் பான தீர்த்தம் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் அகஸ்தியர் அருவி, நெல்லையப்பர் கோவில், காரையாறு அணை என பல்வேறு சிறப்புமிக்க சுற்றுலாத்தலங்களும், அணைகளும் ஏராளமாக உள்ள நிலையில் மணிமுத்தாறு அருவி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மணிமுத்தாறு அருவியில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அருவியல் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியல் குளிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று(நவ.11) நீர்வரத்து சீரானதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

The post நீர்வரத்து சீரானதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! appeared first on Dinakaran.

Read Entire Article