நீரால் விளைந்தது... மழையால் அழிந்தது! - கம்பம் பகுதி வயல்களில் சாய்ந்த நெற்பயிர்கள்

7 months ago 42

கம்பம்: கம்பம் பகுதியில் பெய்த மழையால் மகசூலுக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் வயலில் நீர் தேங்கியதால் பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர் மூலம் தேனி மாவட்டத்தில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. முதல் போக சாகுபடிக்காக கடந்த ஜூனில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தலைமதகு பகுதியான லோயர்கேம்ப், கூடலூர், கம்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் நாற்றுபாவி நெல் நடவு செய்யப்பட்டது.

Read Entire Article