நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி.... பெங்களூருவில் ஜூலை 5-ந் தேதி நடக்கிறது

1 day ago 4

பெங்களூரு,

முதலாவது நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவாரா ஸ்டேடியத்தில் கடந்த மாதம் (மே) 24-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் ஜூலை 5-ந் தேதி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர்.

இந்த போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2 முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன் தாமஸ் ரோக்லெர் (ஜெர்மனி), முன்னாள் உலக சாம்பியன் ஜூலியஸ் யிகோ (கென்யா) உள்பட 12 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 

Read Entire Article