நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதியாதது ஏன்? - வளர்மதி கேள்வி

3 hours ago 1

பல்லாவரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. இதனிடையே திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். செனனை உயர் நீதிமன்றமும் அமைச்சர் பொன்முடி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

Read Entire Article