சென்னை: நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என்று பயந்து, மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கலைஞரின் 102வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்ேபாது திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கினார்.
அப்போது, அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி சொல்லக்கூடிய வகையில் பிரசாரம் நடைபெற இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது எதிர்பார்த்தது தான்; அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்” என்றார்.
The post நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்: முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.