நீட் விலக்கு பெற இபிஎஸ், தமிழிசை உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்

3 hours ago 3

சென்னை: “அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நீட் விலக்கு பெறுவதற்கு தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்” என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நீட் வந்த நாள் முதலே குளறுபடிகள் தான் நடக்கிறது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் என்பது சட்டரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த 7.5 சதவீதத்தினால் பலனும் இருக்கின்றது என்கின்ற வகையில், தமிழக முதல்வர், மருத்துவ கல்வி போல் சட்டம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீதத்தை கொண்டு வந்தார்.

Read Entire Article