
நாமக்கல் மாவட்டம் அருகே மோகனூர் அடுத்துள்ள ஆண்டார்பும் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் விவசாயி. இவர் பருத்தி விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் செல்வம் அவரது மனைவி மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் ஆகியோர் விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது நிலம் அருகே வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலியை ஒட்டி மின் கம்பம் ஒன்று இருந்தது.
இதனால் எதிர்பாராதவிதமாக மின்சாரம் கம்பி வேலியில் பாய்ந்தது. இதனை கவனிக்காத செல்வம் என்பவரது மனைவி கம்பி வேலியில் கை வைத்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனைக்கண்ட அங்கிருந்த இரண்டு பேரக்குழந்தைகளும் அவரை பிடித்துள்ளனர். இதனால் அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியது.
இதனால் சுஜித், ஐவிழி உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.