நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

2 months ago 11

நாமக்கல்: தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள், பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள நாகப்பாளையத்தைச் சேர்ந்தவர் வினித் (21). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் கல்லூரி நண்பர்களான தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் (21), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேக்பஷ்ரூல் சாதிக் (21) ஆகிய இருவரும் வந்துள்ளனர். பின் மாலையில் நாகப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக 3 பேரும் சென்றுள்ளனர்.

Read Entire Article