
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வந்த மாணவன் ஒருவன் கழிவறையில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளான்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து, மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அலறியடித்துக்கொண்டு மகனை பார்ப்பதற்காக சென்றனர்.
இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் இறப்புக்கு காரணம் கேட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.