சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஒரு பெருமைமிகு பெற்றோராகவும் நமது இளைஞர்களின் அறிவுத்திறம் அங்கீகாரம் பெறுவது கண்டு எனது நெஞ்சம் பெருமித உணர்வால் நிறைகிறது. என் நெஞ்சுக்கு நெருக்கமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நாம் வளர்த்தெடுத்து வருகிறோம். நமது இளைஞர்கள் நிமிர்ந்து நின்று, “உலகை வெற்றிகொள்ளவும் முன்னடத்திச் செல்லவும் தயார்” என்று பறைசாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post ‘நான் முதல்வன்’ திட்டம் வெற்றி முதல்வர் பெருமிதம் appeared first on Dinakaran.