சேலம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து மேட்டூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகியுடன் 120 பேர் விலகியுள்ளதாக முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, யாருடைய கருத்தையும் கேட்பதில்லை, தான் சொல்வதை கேட்காவிட்டால் வெளியே போ என்று கூறி வருகிறார் என்று நிர்வாகிகள் குற்றம்சாட்டி அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், உறுப்பினர்கள் விலகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசனுடன் 100 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இந்நிலையில், பொங்கலையொட்டி நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் இளைஞர் பாசறை செயலாளர் பாரப்பட்டி சுதாகரன் மற்று அவருடன் பயணித்த 120 பேர் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் தங்களை விடுவித்து கொள்வதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
The post நாதகவில் இருந்து 100 பேர் விலகல் appeared first on Dinakaran.