டெல்லி: நாட்டில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்; தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
The post நாட்டில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.