சென்னை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணையை கொண்டு குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தாக்குதலுக்கு தயார் என்றும், வெற்றிக்கான பயிற்சி என்றும் இந்திய ராணுவம் வீடியோ பதிவு வெளீயிட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் கட்சியினர் இந்திய ராணுவத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை ஆகும். இதில் ஒன்றிய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் உறுதியளித்துள்ளார்.
The post நாட்டின் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம் அன்புமணி இராமதாஸ் உறுதி appeared first on Dinakaran.