டெல்லி : மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளுக்கு கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி, சாதாரண ரயில் Non AC (Non Suburban) 2ஆம் வகுப்புக்கு 500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை, 501 – 1500 கி.மீ. வரை கட்டணம் ரூ.5, 1500 – 2500 கி.மீ. வரை கட்டணம் ரூ.10, 2501 – 3000 கி.மீ. வரை கட்டணம் ரூ.15 உயர்த்தப்படுகிறது. மேலும் ஸ்லீப்பர் மற்றும் சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்படுகிறது.
மெயில் மற்றும் விரைவு ரயில்கள்:
NON AC
ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிப்பு
AC Coach
குளிர்சாதன வசதி: இருக்கை
குளிர்சாதன வசதி: 1, 2, 3 வகுப்புகள் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு
அதே போல், புறநகர் ரயில் கட்டணம் மற்றும் சீசன் டிக்கெட் கட்டண உயர்வு இல்லை என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
The post நாடு முழுவதும் நாளை முதல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது appeared first on Dinakaran.