நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் : திமுக எம்.பி. கனிமொழி

2 hours ago 2

சென்னை :ஒன்றிய அரசின் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், “இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் முன்னகர்த்தி வரும் பாஜகவின் நீண்ட கால செயல்திட்டம் தான் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு.

பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது ஆளும் ஒன்றிய பாஜக அரசு.ஒன்றிய அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம்”என்று கூறப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் : திமுக எம்.பி. கனிமொழி appeared first on Dinakaran.

Read Entire Article