நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

1 day ago 6

நாகப்பட்டினம்,

நாகை, இலங்கை காங்கேசன்துறை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கடந்த ஆண்டு (2024) ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது.

இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது கடல் சீற்றம் தணிந்து சீரான வானிலை நிலவுவதால் நேற்று நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. நாகை துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணி அளவில் கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது. அந்த கப்பலில் 112 பேர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டனர். 

Read Entire Article