நாகர்கோவில்-காச்சிகுடா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு

4 hours ago 1

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா-நாகர்கோவில் இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்படும்.

அதன்படி, காச்சிகுடாவில் இருந்து வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-07435) இயக்கப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் 13-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) காச்சிகுடாவிற்கு சிறப்பு ரெயில் (07436) இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article