நாகர்கோவிலில் ₹1.50 கோடியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

6 months ago 18

நாகர்கோவில், நவ.14: நாகர்கோவிலில் a1.5 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட a1.5 கோடி நிதி ஒதுக்கி கடந்த 2022-2023 நிதி ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி நேற்று காலை புதிய அலுவலக கட்டுமான பணிக்கு காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் குத்துவிளக்கு ஏற்றினார். அறநிலைய துறை உதவி ஆணையர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவிலில் ₹1.50 கோடியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முதல்வர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Read Entire Article