நாகப்பட்டினத்தில் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்நாள் கூட்டம்

2 hours ago 2

 

நாகப்பட்டினம், ஜூன் 10: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 244 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர்அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோலையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ பவணந்தி, தனி துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினத்தில் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article