நாகப்பட்டினத்தில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழி

8 months ago 34

 

நாகப்பட்டினம்,அக்.29: நாகப்பட்டினத்தில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியை டிஆர்ஓ பேபி முன்னிலையில் அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் டிஆர்ஓ பேபி தலைமையில் நடந்தது. குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 92 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு டிஆர்ஓ அறிவுறுத்தினார். பின்னர் ஊழல் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியை டிஆர்ஓ பேபி தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டார்.

The post நாகப்பட்டினத்தில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழி appeared first on Dinakaran.

Read Entire Article