நவராத்திரி விழாவுக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

2 hours ago 1

சூரத்,

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் உள்ளது மோடா போர்சரா கிராமம். இங்கு நவராத்திரி விழா கொண்டாட்டம் நடந்து வருகிறது. விழாவை பார்க்க 17 வயது மாணவி, தனது தோழியுடன் சென்றார். விழா நடந்த இடத்தில் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அந்த சிறுமி சென்றபோது 3 பேர், அந்த மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அவளது தோழி தப்பி வந்து மற்றவர்களிடம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றவாளிகள் 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை பிடித்தால், 3-வது நபரையும் பிடித்துவிடுவோம் என்றனர். இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் வடோதரா பகுதியில் ஒரு சிறுமி, பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இதேபோல 3 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே குற்றவாளிகளா என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article