நவ.30-ல் திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்

2 months ago 13

திருவாரூர்: திருவாரூர் அருகே, நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் நவ.30ம் தேதி, நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குரயரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தரவுள்ளார்.

திருவாரூர் அருகே, நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் நாடு முழுவதிலும் இருந்து 2,700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தர உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article