நத்தம் அருகே மினிவேன் மோதி தொழிலாளி படுகாயம்

3 months ago 9

நத்தம், பிப்.17: நத்தம் அருகே மினிவேன் மோதி தொழிலாளி படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சிவசங்கர் (20). தொழிலாளி. இவர் நத்தம் முடக்குசாலை பகுதியில் உள்ள சாலையில் நின்று, தவசிமடை ஜல்லிக்கட்டிற்கு செல்வதற்காக மாடு ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது சேலத்தில் இருந்து கீழக்கரைக்கு கொண்டிருந்த மினிவேன் அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நத்தம் அருகே மினிவேன் மோதி தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article