நத்தம் அருகே பாதயாத்திரை பக்தர் பேருந்து மோதி பலி

1 month ago 3

நத்தம், பிப். 10: புதுக்கோட்டை மாவட்டம், வலையம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (30). இவர் தைப்பூசத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் இருந்து நத்தம் வழியாக பழநிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். நத்தம் மெய்யம்பட்டி அருகே நேற்றிரவு 8.15 மணியளவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

The post நத்தம் அருகே பாதயாத்திரை பக்தர் பேருந்து மோதி பலி appeared first on Dinakaran.

Read Entire Article