வந்தவாசி, ஜன. 19: வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் கவுதம்(18). இவருக்கும் கோட்டை பகுதியைச் சேர்ந்த தீபன் மனோஜ் (21) என்பவருக்கும் இன்ஸ்ட்கிராம் ரீல்ஸ் பதிவிடுவதில் தகராறு இருந்துள்ளது. இதனால் முன்விரோதம் இருந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் பொட்டி நாயுடு தெரு முகப்பில் கவுதம் பைக்கில் வந்தாராம். அப்போது தீபக் மனோஜ், இவரது நண்பர்கள் ஆகாஷ், மார்ட்டின் (18) செழியன் ஆகியோர் கும்பலாக வழி மடக்கி தகராறு செய்து தாக்கியுள்ளனர். தடுக்க வந்த கவுதமின் நண்பர் பாலாஜியையும் சரமாரியாக தாக்கினார்களாம். இதில் காயமடைந்த கவுதம் பாலாஜி இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து கவுதம் வந்தவாசி தெற்கு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து மார்டீனை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள செழியன் உள்ளிட்ட 3 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
The post நண்பர்கள் தாக்கிய வாலிபர் கைது இன்ஸ்ட்கிராம் ரீல்ஸ் பதிவிடுவதில் தகராறு appeared first on Dinakaran.