துரைப்பாக்கம்: சென்னை கோட்டூர்புரம், பாரதி அவென்யூ, 1வது தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (30). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான கோட்டூர் எரிக்கரை சாலையை சேர்ந்த பெயின்டர் அஜித்குமார் (40), அருண் (32), சாண்டி (36) ஆகியோருடன் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் உள்ள திருமணம் மண்டபம் அருகே மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, போதை தலைக்கேறியதும், நண்பர்களுக்குள் விளையாட்டாக ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துள்ளனர்.
இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, பெயின்டர் அஜித்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால், வழக்கறிஞர் மதன்குமாரை குத்த முயன்றுள்ளார். இதை தடுத்த அவரது இடது கையில் குத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த மதன்குமார், தனது சகோதரர் கோபிநாத்திற்கு போனில் தகவல் அளித்தார். அதன்படி, விரைந்து வந்த கோபிநாத் தனது சகோதரனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய பெயின்டர் அஜித்குமாரை தேடி வருகின்றனர்.
The post நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு நீதிமன்ற வழக்கறிஞருக்கு சரமாரி கத்திகுத்து appeared first on Dinakaran.