நடிகை சீதா வீட்டின் படுக்கை அறையில் 4.5 பவுன் திருட்டு: வேலைக்கார பெண்களிடம் போலீசார் விசாரணை

2 months ago 9


சென்னை: நடிகை சீதா வீட்டின் படுக்கை அறையில் வைத்திருந்த 4.5 பவுன் நகை திருடு போனது தொடர்பாக அவரது வீட்டில் பணியாற்றும் 2 வேலைக்கார பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியில் நடிகை சீதா(56) வசித்து வருகிறார். பிரபல நடிகையான இவர், நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி ஆவார். தனது கணவரை பிரிந்து சீதா தற்போது தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 31ம் தேதி சீதாவின் சகோதரர் மனைவி அணிந்து இருந்த 4.5 பவுன் நகையை கழுற்றி ஒரு பையில் படுக்கையில் வைத்துள்ளார். அதன் பிறகு பார்த்த போது நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து சீதா தனது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்துவரும் சவுந்தரி மற்றும் 4 ஆண்டுகளாக பணியாற்றி வரம் சந்தியா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி போலீசார் வேலைக்கார பெண்களான சவுந்தரி மற்றும் சந்தியாவிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், நகை திருடியது தொடர்பாக போலீசார் 2 வேலைக்கார பெண்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது அலுவலகத்தில் இருந்து 12 பவுன் மாயமானதாக புகார் அளித்திருந்த நிலையில், முன்னாள் மனைவியும் நடிகையுமான சீதா நகை மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நடிகை சீதா வீட்டின் படுக்கை அறையில் 4.5 பவுன் திருட்டு: வேலைக்கார பெண்களிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article