நடிகர்களை தவிர வேறு யாரும் போதைப்பொருள்களை பயன்படுத்தவில்லையா? - சீமான் கேள்வி

3 hours ago 1

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா? இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது. மும்பையில் அதானியின் துறைமுகத்தில் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருள் கப்பலில் வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த கப்பலை திருப்பி அனுப்பினீர்களா? போதைப் பொருளை என்ன செய்தீர்? என்று நான் ஒருவன் தான் கேள்வி கேட்டேன்.

போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே? காட்டுக்குள் சந்தனக் கடத்தல் வீரப்பன், யானை தந்தம் கடத்தல், கடத்தல்காரர்கள் என்று கூறுவீர்கள். விற்றவன் காட்டுக்குள் இருந்தான். வாங்கினவன் எங்கு இருந்தான்? அவர்களில் எத்தனை பேரை கைது செய்தீர்கள்? கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும்தான் குற்றவாளிகளா? அப்பாவிகள்.

ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் விற்றவன் அதிமுக நிர்வாகி என்பதால் இதை திருப்புகிறீர்கள். அப்போ, திமுகவிற்கும், போதைப் பொருளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா? போதைப் பொருள் எப்படி புழங்குகிறது. அதன் வேரை வெட்டுங்கள். இளையும், கிளையையும் வெட்டுகிறீர்கள்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Read Entire Article