நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை: ஐகோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து தகவல்

6 months ago 30

சென்னை: நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாத மனு தாக்கல் செய்துள்ளார். யூடுயூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசிதற்காக ரூ.5 கோடி மானநஷ்ட்ட ஈடாக வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடகோரியும், தன்னைபற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்றுகொள்வதாகவும், இனி அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்ய சிங்கமுத்து தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே பிறபித்த உத்தரவின்படி நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், இந்த உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறாக மற்றும் தவறான எந்த ஒரு தகவல்களையும் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ வெளியிடப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

The post நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை: ஐகோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article